காந்தாரா சாப்டர் 1 படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான ‘காந்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் பிரீக்குவலாக உருவாகியிருந்த திரைப்படம் தான் ‘காந்தாரா சாப்டர் 1’. இந்த படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மினி வசந்த், ஜெயராம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ‘காந்தாரா’ படத்தை போல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் மேக்கிங், ஆக்ஷன் காட்சிகள், ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் நடிப்பு, ருக்மினி வசந்தின் கதாபாத்திரம், கதைக்களம், அஜனீஸ் லோக்நாத்தின் இசை போன்றவை இந்த படத்தின் சிறப்பம்சங்களாக அமைந்து, உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இப்படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவை பெறுவதோடு மட்டுமல்லாமல் வசூலையும் அள்ளி வருகிறது. அந்த வகையில் வெளியான ஒரு வாரத்தில் இப்படம் ரூ.500 கோடியை கடந்த நிலையில் தற்போது 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.655 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இப்படம் விரைவில் ரூ.100 கோடியை கடந்து விடும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.