spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇணையத்தை கவரும் 'காத்திரு' பாடல் - கண்ணை நம்பாதே

இணையத்தை கவரும் ‘காத்திரு’ பாடல் – கண்ணை நம்பாதே

-

- Advertisement -

இணையத்தை கவரும் ‘காத்திரு’ பாடல் – கண்ணை நம்பாதே

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணை நம்பாதே‘ திரைப்படம், சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது.

we-r-hiring

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும், திரை பிரபலங்கள் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு சமூக வளைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘காத்திரு’ பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. புகழேந்தி வரிகளில் லக்ஷ்மிகாந்த் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

இந்த பாடல் இன்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக உள்ளது.

MUST READ