- Advertisement -
அண்மையில் வெளியாகும் மலையாள திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே ஓடிடி தளங்களில் மலையாள படங்களை வௌியிடுவதில், பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்த 42 நாட்கள் கழித்து தான், ஓடிடி தளத்தில் வர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தனர். இந்த நிபந்தனைக்கு, மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களும் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், இந்த நிபந்தனை மீறி சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.
