spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கு பக்கம் திரும்பும் லோகேஷ்.... ஒரே படத்தில் 2 மாஸ் ஹீரோக்கள் கன்ஃபார்ம்!

தெலுங்கு பக்கம் திரும்பும் லோகேஷ்…. ஒரே படத்தில் 2 மாஸ் ஹீரோக்கள் கன்ஃபார்ம்!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தெலுங்கு பக்கம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தெலுங்கு பக்கம் திரும்பும் லோகேஷ்.... ஒரே படத்தில் 2 மாஸ் ஹீரோக்கள் கன்ஃபார்ம்!

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ஏனென்றால் இவருடைய இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரிக் குவித்தது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் சரிவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து லோகேஷ், ‘கைதி 2’ படத்தை இயக்கப்போகிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையில் லோகேஷ், தான் ஹீரோவாக நடித்து வரும் ‘டிசி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி ஆரம்பத்தில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் வைத்து இவர் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை நெல்சன் தட்டி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு பக்கம் திரும்பும் லோகேஷ்.... ஒரே படத்தில் 2 மாஸ் ஹீரோக்கள் கன்ஃபார்ம்!தற்போது அதே கதையில் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களை நடிக்க வைக்க லோகேஷ் முடிவு செய்திருப்பதாகவும், அந்த படத்தில் பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவரையும் நடிக்க வைக்கப் போவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

MUST READ