- Advertisement -
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் சென்னையில், திரைப்பட காட்சிகள் ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் நாளை மறுநாள் (டிச.05) தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கவுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. புயலால், பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
