spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபு தயாரிக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'...... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்!

வெங்கட் பிரபு தயாரிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’…… ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு தயாரிக்கும் படம் தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகிறார்.

we-r-hiring

இந்நிலையில் மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்தால் ஆனந்த் இயக்கவுள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படத்தை வெங்கட் பிரபு தயாரிக்கிறார். இதில் விடுதலை படத்தில் நடித்திருந்த பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே விஜய், குக் வித் கோமாளி பாலா , ஆனந்த், குமாரவேல், லீலா, மோனிகா, வினோத், இர்ஃபான்
உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ எச் காசிப் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நண்பர்களைப் பற்றிய கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இதில் 13 நடிகர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் கூட நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக சுப்பிரமணியபுரம், பாய்ஸ், பஞ்சதந்திரம், என்றென்றும் புன்னகை, சென்னை 600028 உள்ளிட்ட படங்களில் இருக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக போஸ்டர்களை வெளியிட்டு கவனம் ஈர்த்தனர்.

மேலும் நண்பர்கள் தினமான இன்று நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அந்த போஸ்டரில் நண்பர்கள் பற்றி நன்கு அறிந்த, நட்புக்காகவும் நண்பர்களுக்காகவும் எதையும் செய்யக் கூடிய பிரபலமான, ஸ்பெஷலான ஒருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் போகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ