spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர்' இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை........இயக்குனர் நெல்சன்!

‘ஜெயிலர்’ இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை……..இயக்குனர் நெல்சன்!

-

- Advertisement -

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. சிலை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்ப படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே தற்போது வரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழக மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் 375 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை எந்த படமும் எட்டாத வசூலை இப்படம் ஒரே வாரத்தில் எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த படம் உலகம் எங்கும் வெற்றிகரமாக தனது வெற்றி கொடியை நிலைநாட்டி வருவதன் காரணமாக நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.

we-r-hiring

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்சன், “ஜெயிலர் திரைப்படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்குக் காரணம், ஸ்கிரிப்டிங் மீதான நம்பிக்கையும் தலைவரின் மீதான நம்பிக்கையும் தான். அவர்தான் அதை சாத்தியப்படுத்தியது. தாங்கள் படத்தில் பெரும்பாலும் செட் தான் பயன்படுத்தினோம். ஆனால் அனைத்தும் மிக இயல்பாக காட்சியளிக்கிறது. இதற்காக கலை இயக்குனர் கிரண் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் அண்ணா அவர்களுக்கு எனது நன்றி” என பேசியுள்ளார்.

MUST READ