கடந்த ஜூலை 5ஆம் தேதி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவர் பிரபல இயக்குனரின் மனைவி மோனிஷாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி உள்ளதாக தகவல் வெளியானது. எனவே போலீசார் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் நெல்சனிடமும் விசாரணை நடத்த இருப்பதாகவும் சமீபகாலமாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவல் திரைத்துறையினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது நெல்சன் மனைவி மோனிஷாவிற்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என்று போலீசார் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நெல்சன் மனைவியிடம் 10 நாட்களுக்கு முன்பாகவே விசாரணை நடைபெற்ற முடிந்தது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களை இயக்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அடுத்ததாக இவர் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.