பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபாஸ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த வகையில் ஏற்கனவே மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர ஸ்பிரிட், சலார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இருப்பினும் பிரபாஸ் நடித்த படங்களிலேயே பாகுபலி படம் தான் மாஸ்டர் பீஸ். இந்த படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த படம் ராஜமௌலிக்கும், பிரபாஸுக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் இரண்டு பாகங்களையுமே ரசிகர்கள் இன்றுவரையிலும் கொண்டாடி வருகின்றனர். அடுத்தது பாகுபலி மூன்றாம் பாகத்தை எடுக்க ராஜமௌலி திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாகுபலி பாகம் 1 திரைப்படம் 2025 அக்டோபர் மாதத்தில் ரீ ரிலீஸாக இருக்கிறது என புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 2025 உடன் பாகுபலி 1 திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்வதால் அதனை கொண்டாடுவதற்காக இந்த படத்தை ரீ- ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கா நிறுவனம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பிரபாஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. எனவே ரசிகர்கள் அதனை இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள்.