- Advertisement -
40 வயதை எட்டியிருக்கும் பிரபல நடிகை மீரா சோப்ராவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.
தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் மீரா சோப்ரா. இவர் சினிமாவில் நிலா என்று அழைக்கப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் தமிழில் அடுத்தடுத்து மருதமலை மற்றும் லீ படங்களில் நடித்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் நடிகை மீரா சோப்ரா. இதன் பிறகு தமிழில் இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், இதுவரை தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
