Homeசெய்திகள்சினிமாஅலப்பறைக்கு மேல் அலப்பறை கிளப்பும் தலைவர்...... வசூலில் 300 கோடியை கடந்த ஜெயிலர்!

அலப்பறைக்கு மேல் அலப்பறை கிளப்பும் தலைவர்…… வசூலில் 300 கோடியை கடந்த ஜெயிலர்!

-

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி,யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு வெளியான ஜெயிலத் திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது. அதேசமயம் ஈஸ்ட் பணத்தின் தோல்விக்கு பிறகு நெல்சன் திலீப் குமாருக்கும் இழந்த வெற்றியை திருப்பித் தந்துள்ளது.

இப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகாவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியான 4 நாட்களில்
உலகம் முழுவதும் 300 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ