spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவாழ்வில் மறக்கமுடியாத நாள்... மகிழ்ச்சியுடன் அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்...

வாழ்வில் மறக்கமுடியாத நாள்… மகிழ்ச்சியுடன் அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்…

-

- Advertisement -
அயோத்தில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து புறப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் – மசூதி பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்ட கடந்த 2020-ம் ஆண்டு கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இதைத் தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளாக கோயிலின் கட்டட வேலைகள் நடைபெற்று வந்தன

ராமர் கோயிலால் மிகப்பெரிய வளர்ச்சிக் காணும் அயோத்தி!

நாளை இந்த கோயிலில் குடமுழுக்கு விழா மிகவும் பிரம்மாண்டமாக உலகமே வியக்கத்தக்க வகையில் நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள அரசியல் அதிபர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமன்றி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்காக கோயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
we-r-hiring

இந்நிலையில், குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து புறப்பட்டார். அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் அயோத்தி விமான நிலையம் அடைகிறார். இந்நிலையில், விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், இந்நாளை மறக்க முடியாது என்றும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். ரஜினிகாந்த் மட்டுமன்றி அனைத்து மொழி நடிகர், நடிகைகளும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

MUST READ