- Advertisement -
சலார் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே, முன்பதிவில் மட்டும் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது.
கேஜிஎஃப் எனும் பிரம்மாண்ட படைப்பின் மூலம் இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். ஒரு குறுகிய வட்டத்தில் இருந்த கன்னட சினிமாவை உலகளவில் தூக்கிச் சென்றது கேஜிஎஃப் திரைப்படம். இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இதில், இரண்டாம் பாகம் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் சலார்.
