STR 49 படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் சிம்பு, தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் சிம்பு, பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இது தவிர கயடு லோஹர், மிர்ணாள் தாகூர் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் நடிகை கயடு லோஹர் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் நடிகர் சிம்பு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “STR 50 படத்தின் ப்ரோமோ ஷூட் விரைவில் தொடங்க இருக்கிறது. STR 49 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.
- Advertisement -