பத்து தல படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு தனது 48 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இது குறித்து அறிவிப்பை ஏற்கனவே பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
எனவே தொடர்ந்து STR48 படத்தின் அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் சிம்பு இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கிறார் என்று செய்திகள் கசிந்திருந்தது. மேலும் இந்த படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைக்க தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சமீபத்தில் வீடியோக்களும் வெளியாகி வைரலானது.
இவ்வாறு இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி வரும் வேளையில் படத்தின் ஷூட்டிங் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது STR48 படத்தின் சூட்டிங் 2024 பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் தொடங்கும் என தற்போதைய தகவல்கள் கூறுகிறது. மேலும் கூடுதல் தகவலாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் முதல் 30 நாட்கள் இடைவிடாமல் நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு 30 நாட்கள் இடைவெளி விட்டு 2024 ஜூலை மாதம் வரை படப் பிடிப்புகள் தொடரும் என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் படத்தினை 2025 இல் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது அவதார் பட பேட்டர்னைப் போல் 30 நாட்கள் படப்பிடிப்புக்கு பின் பல வருடங்கள் போஸ்ட் புரொடக்ஷன் நடப்பது போன்று STR48 படத்தையும் படமாக உள்ளனர் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.