spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரே நேரத்தில் இரண்டு பாலிவுட் படத்தில் கமிட்டான பிரபல நடிகை 

ஒரே நேரத்தில் இரண்டு பாலிவுட் படத்தில் கமிட்டான பிரபல நடிகை 

-

- Advertisement -
மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வௌியான குண்டூர் காரம் திரைப்படத்தில்,  மற்றொரு நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருப்பார். தெலுங்கில் முன்னணி நடிகையாக அவர் வலம் வருகிறார். குண்டூர் காரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தெலுங்கில் இத்திரைப்படத்திற்கு முன்பாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி, மற்றும் விஜய் நடிக்கும் கோட் திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகை ஸ்ரீ லீலாவுக்கு பாலிவுட் பக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் அவர் நடிக்க இருக்கிறார்.
முதலில், பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் சைஃப் அலிகானின் மகன் இப்ராஹிம் அலிகான் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். காதல் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் புதிய படத்திலும் ஸ்ரீ லீலா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மிர்ணாள் தாகூரும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். டேவிட் தவான் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதனால், ஒரே நேரத்தில் இரண்டு பாலிவுட் படங்களில் ஸ்ரீ லீலா நடிக்க இருக்கிறார். மேலும், வருண் தவான் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகளுடன் கூட்டணி அமைத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ