Homeசெய்திகள்சினிமாவட இந்தியாவில் நடைபெறும் 'STR 49' படப்பிடிப்பு?

வட இந்தியாவில் நடைபெறும் ‘STR 49’ படப்பிடிப்பு?

-

- Advertisement -

STR 49 படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.வட இந்தியாவில் நடைபெறும் 'STR 49' படப்பிடிப்பு?

சிம்பு நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் ஜூன் 5 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சிம்பு, பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். STR 49 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம், கயடு லோஹர், மிர்ணாள் தாகூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், STR 49 திரைப்படம் கமல்ஹாசனின் வசூல்ராஜா MBBS படத்தைப் போல் உருவாகும் என அப்டேட் கொடுத்திருந்தார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் நடைபெறும் 'STR 49' படப்பிடிப்பு?அதன்படி ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடத்தப் போவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படமானது கல்லூரி கதைக்களம் என்பதால், புனேவில் உள்ள கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் படப்பிடிப்பை நடத்தினால் ரசிகர்களின் கூட்டம் கூடும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ