spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மகேஷ் பாபு

கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மகேஷ் பாபு

-

- Advertisement -
டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. தமிழில் தளபதியாக விஜய் கொண்டாடப்படுவதை போல, தெலுங்கில் மகேஷ் பாபுவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமான மகேஷ்பாபு, ராஜகுமாருடு திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவரது நடிப்பில் புகாரி, ஒக்கடு, அத்தடு ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வௌியாகி மாபெரும் ஹிட் அடித்தன. இதில் ஒக்கடு திரைப்படம் தான் தமிழில் கில்லி என்றபெயரில் ரீமேக் செய்தனர். இதில் விஜய் நடித்திருப்பார்.

இறுதியாக மகேஷ் பாபு நடிப்பில் குண்டூர் காரம் திரைப்படம் வெளியானது. இதில் மீனாட்சி சௌத்ரி மற்றும் ஸ்ரீ லீலா நாயகிகளாக நடித்திருந்தனர். இத்திரைப்டபத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்களை மகேஷ் பாபு சந்தித்துள்ளார். மேலும், வீரர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படங்களை ஐதராபாத் அணியின் நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

MUST READ