வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழலில் இருந்து நடிகர் சூர்யா, தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவு இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தரையில் சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்த அவர், பின்னர் கண்களை மூடி அழுதார்.
நடிகர் திரு.சிவக்குமார், திரு.சூர்யா, திரு.கார்த்திக் அவர்கள் இன்று (05.01.2024) கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டிற்கு நேரில் சென்று பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் pic.twitter.com/6rtR6EXMsk
— Vijayakant (@iVijayakant) January 5, 2024