இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட உழைத்த படங்களை இயக்கி வெற்றி கண்டார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அந்தமான், ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் இரண்டு விதமான லுக்கில் நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளன.
அதாவது ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களில் கேங்ஸ்டர் லுக்கில் இருந்தார். அடுத்தது கிளீன் ஷேவ் செய்து வாரணம் ஆயிரம் பட லுக்கில் நடித்து வருகிறாராம். இது தொடர்பான காட்சிகள் தான் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -