நடிகர் சூர்யாவின் அடுத்த பட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா ‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படமானது சூர்யாவின் 47வது படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, போலீஸாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அடுத்தது இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 2025 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 2026 ஜனவரி மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகளை கேரளாவின் சில பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற விவரங்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.