Homeசெய்திகள்சினிமாபஹத் பாசில் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.... வெளியான புதிய தகவல்!

பஹத் பாசில் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா, பஹத் பாசில் பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பஹத் பாசில் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.... வெளியான புதிய தகவல்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த மே மாதம் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இதற்கிடையில் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிக்க போகிறார். தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் சூர்யா இன்னும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.பஹத் பாசில் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.... வெளியான புதிய தகவல்! அதன்படி மலையாள இயக்குனர் பசில் ஜோசப் பெயரும் அந்த பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க போகிறாராம் சூர்யா. இந்த படத்தை தமிழ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வருங்காலத்தில் இவர்களது கூட்டணியிலான புதிய படம் உருவாகும் எனவும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.

MUST READ