உதவி இயக்குனர் ஒருவர் அத்துமீறி கேரவனுக்குள் நுழைந்ததாகவும் அதனால் தான் பதற்றம் அடைந்ததாகவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடிக்க கூடியவர். அந்த வகையில் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கண்ணப்பா போன்ற தெலுங்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் காஜல் அகர்வால் கமல்ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்திலும் சத்யபாமா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் காஜல் அகர்வால் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது, “நான் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரவனுக்குள் சென்றேன். அப்போது அந்த படத்தின் உதவி இயக்குனர் என் அனுமதியின்றி அத்துமீறி அந்த கேரவனுக்குள் நுழைந்தார். அவர் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் தனது சட்டையை கழற்றி அவரது நெஞ்சில் என் பெயரை டாட்டூ குத்தியதை காட்டினார். இந்த சம்பவம் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தினாலும் ஆனால் அவர் செய்த விதம் என்னை பதற்றம் அடைய வைத்தது. அதனால் அவரிடம் மென்மையாக எச்சரிக்கை. பொது இடங்களில் சில ரசிகர்கள் இதுபோன்று இல்லை நெறியா அன்பு காட்டும் விதம் மனதிற்கு சென்ற இடத்தை ஏற்படுத்திகிறது” என்று தெரிவித்துள்ளார்.