Homeசெய்திகள்சினிமாமீண்டும் தொடங்கும் 'கங்குவா' படப்பிடிப்பு.... எதற்காக தெரியுமா?

மீண்டும் தொடங்கும் ‘கங்குவா’ படப்பிடிப்பு…. எதற்காக தெரியுமா?

-

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் தான் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், கோவை சரளா, யோகி பாபு, நட்டி நடராஜ், திஷா பதானி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீண்டும் தொடங்கும் 'கங்குவா' படப்பிடிப்பு.... எதற்காக தெரியுமா?இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் ஒரு வரலாற்று சரித்திர படமாக இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த படத்தை 2024 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் தொடங்கும் 'கங்குவா' படப்பிடிப்பு.... எதற்காக தெரியுமா?அதாவது ஏற்கனவே கங்குவா அதாவது ஏற்கனவே கங்குவா 2 படத்தை சிறுத்தை சிவா இயக்கப் போகிறார் என்று தகவல் கசிந்திருந்த நிலையில், தற்போது கங்குவா 2 படத்திற்கான லீடு கொடுக்கும்படியான காட்சிகளை படமாக்க உள்ளனராம். அதன்படி மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், இதில் பாபி தியோல், சூர்யா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இவர்களின் கால்ஷீட்டுக்காக பட குழுவினர் காத்திருப்பதாகவும் விரைவில் இந்த காட்சிகள் படமாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம் இதன் மூலம் கங்குவா 2 படம் உருவாக இருப்பது உறுதியாகிவிட்டது.

MUST READ