தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சொர்க்கவாசல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் இவர், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி பெயரையும் புகழையும் பெற்றார். தற்போது இவர் சூர்யாவின் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, யோகி பாபு, நட்டி நடராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதிலும் ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்தில் சூர்யாவை எப்படி காட்டப் போகிறார் என்று எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. இதற்கிடையில் ஆர்.ஜே. பாலாஜி, ஐபிஎல் கிரிக்கெட்டில் கமெண்டரி செய்வார். கிரிக்கெட்டை பொருத்தவரை ஆங்கிலத்தில் கமெண்டரி கேட்டு வந்த ரசிகர்களுக்கு தமிழில் நகைச்சுவை கலந்து ஆர்.ஜே. பாலாஜி கொடுக்கும் கமெண்டரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் ஐபிஎல் தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்த சீசனில் ஆர்.ஜே. பாலாஜி கமெண்டரி செய்யவில்லை. இது தொடர்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வருஷத்திலேயே எனக்கு ரொம்பவும் பிடிச்சது மார்ச் மாதத்தின் கடைசி, ஏப்ரல், மே தான். இந்த நேரத்தில் நான் எனக்குப் பிடித்த வேலையை செய்வேன்.
View this post on Instagram
ஆனால் இந்த வருடம் ஐபிஎல் கமெண்டரியில் நான் வரமாட்டேன். நான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக செய்ய வேண்டும் என நினைப்பேன். இப்பொழுது ஒரு படத்தை இயக்கி, அதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். அதனால் இந்த வருடம் ஐபிஎலுக்கு பிரேக் விட்டுவிட்டேன். நிச்சயம் அடுத்த சீசனில் வருவேன். ஆனால் என்னை பார்ப்பவர்கள் அண்ணன் நாளைக்கு வந்துருவீங்களா? நேத்து ஏன் வரல நாளைக்கு வருவீங்களா? என்று கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று எமோஷனலாக பேசியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.