நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் திரிஷா, அடுத்ததாக 1000 கோடி வசூல் நாயகனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அதாவது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் திரிஷா.
நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நிலையில் ஒரு சில படங்கள் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான கல்கி 2898AD திரைப்படம் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதே சமயம் நடிகர் பிரபாஸ், மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹாரர் ரொமான்டிக் காமெடி கதை களத்தில் உருவாகும் இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து இவர், அர்ஜுன் ரெட்டி, அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஸ்பிரிட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார் என்று லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.