Homeசெய்திகள்சினிமாமாலையுடன் காத்திருந்த கேரள ரசிகர்..... விஜய் என்ன செய்தார் தெரியுமா?

மாலையுடன் காத்திருந்த கேரள ரசிகர்….. விஜய் என்ன செய்தார் தெரியுமா?

-

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை போன்ற பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மாலையுடன் காத்திருந்த கேரள ரசிகர்..... விஜய் என்ன செய்தார் தெரியுமா?அடுத்தபடியாக கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். அங்கு இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 2010 ஆம் ஆண்டு காவலன் படத்திற்காக கேரளா சென்றிருந்தார். அதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கோட் படத்திற்காக விஜய் கேரளா சென்றுள்ள நிலையில் விஜய்யின் வருகையை அறிந்த ரசிகர்கள் விஜயை காண படை எடுத்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் மிகுந்த ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் விஜயை வரவேற்றனர். நேற்று விஜயை காண வந்த கூட்டத்தில் ரசிகர் ஒருவர் மாலையுடன் காத்துக் கொண்டிருந்ததை கண்ட விஜய் இதோ நான் வருகிறேன் என்று அருகில் வந்து அந்த மாலையை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து பேசிய விஜய், “சேச்சி சேட்டன்மார் உங்களைக் காண்பதில் ஒரு பாடு ஒரு பாடு சந்தோஷங்கள். தமிழகத்தில் இருக்கும் எனது நண்பா நண்பிகளை போல் நீங்களும் வேற லெவல். ஓணம் பண்டிகையை கொண்டாடும்போது உங்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை இப்போது பார்க்கிறேன்” என்று பேசினார். மாலையுடன் காத்திருந்த கேரள ரசிகர்..... விஜய் என்ன செய்தார் தெரியுமா?மேலும் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுப்பது, கூட்டத்தில் உள்ள குழந்தையை தூக்கி கொஞ்சியது போன்ற விஜயின் செயல்கள் கேரள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கூட்டம் நள்ளிரவு 2 மணி வரையிலும் விஜயை காண காத்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ