கேதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட போண்டா மணி கடந்த 1991 இல் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மணிக்குயில் கோயமுத்தூர் மாப்பிள்ளை, வசீகரா, சச்சின், வின்னர், சுந்தரா ட்ராவல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 60 வயது நிரம்பிய இவர் கடந்த ஒரு வருடமாக இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழக்க பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த வகையில் சென்னையில் இருக்கும் பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நேற்று தனது வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் போண்டா மணியின் மறைவிற்கு தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் (1-2) #போண்டாமணி pic.twitter.com/6v2CgrYd3a— Vijayakant (@iVijayakant) December 24, 2023
அந்த பதிவில், ” பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார் என்பது கேட்டு அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். அவர் என் மீது அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட மனிதர். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர், திரையுலகினர் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.