பிரபல கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் காலமானாா்.
விருது நகா் காரியாபட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள். மறைந்த கிராமிய பாடகியான பரவை முனியம்மாள் இவரது நெருங்கிய தோழி. அவரைப் போலவே இவரும் கிராமிய பாடகியாக வலம் வந்ததோடு, கோவில் திருவிழாக்களிலும், ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் கிராமிய இசையில் பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளாா்.
2007 ஆம் இயக்குநா் அமீா் இயக்கத்தில், காா்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் “ஊரோரம் புளியமரம்“ என்ற பாடலை பாடினாா். இந்த பாட்டு பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானது. இதன் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு சென்று கிராமிய பாடல்களை பாடி வந்தாா். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளாா். லட்சுமி அம்மாள் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனது வீட்டிலேயே உயிரிழந்தாா். அவரது மரணச் செய்தியைக் கேட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. லட்சுமி அம்மாள் மறைவுக்கு திரைத்துறையினா், நாட்டுப்புறப்பாடல் கலைஞா்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.


