பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐகே- LIK என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். அதன்படி பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த படமானது பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் படப்பிடிப்பு 2025 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -