spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஸ்பெயின் நாட்டில் 'குட் பேட் அக்லி' அடுத்த கட்ட படப்பிடிப்பு.... எப்போது?

ஸ்பெயின் நாட்டில் ‘குட் பேட் அக்லி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு…. எப்போது?

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஸ்பெயின் நாட்டில் 'குட் பேட் அக்லி' அடுத்த கட்ட படப்பிடிப்பு.... எப்போது?

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. மேலும் ரசிகர்கள் பலரும் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் 2024 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் உருவாகி வரும் இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஸ்பெயின் நாட்டில் 'குட் பேட் அக்லி' அடுத்த கட்ட படப்பிடிப்பு.... எப்போது?பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் அடுத்த வாரம் தொடக்க இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ