Homeசெய்திகள்சினிமாஅந்த பிளாக்பஸ்டர் படம் பார்ட்- 10 வரை போகுமா?.... சுந்தர்.சி -யின் மாஸ்டர் பிளான்!

அந்த பிளாக்பஸ்டர் படம் பார்ட்- 10 வரை போகுமா?…. சுந்தர்.சி -யின் மாஸ்டர் பிளான்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் சுந்தர்.சி சிறந்த கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர். அந்த பிளாக்பஸ்டர் படம் பார்ட்- 10 வரை போகுமா?.... சுந்தர்.சி -யின் மாஸ்டர் பிளான்!இவருடைய படங்களில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். மேலும் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருக்கிறார். வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த பிளாக்பஸ்டர் படம் பார்ட்- 10 வரை போகுமா?.... சுந்தர்.சி -யின் மாஸ்டர் பிளான்!ஏற்கனவே சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் வெளியான தலைநகரம், நகரம் ஆகிய படங்களின் இடம்பெற்ற காமெடி காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் கேங்கர்ஸ் திரைப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டியில் வடிவேலு மற்றும் சுந்தர்.சி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அப்போது வடிவேலு, சுந்தர்.சி குறித்து பேசியுள்ளார்.

அதன்படி அவர், “வேற என்ன படம் பண்ண போறீங்க என்று சுந்தர்.சியிடம் கேட்டபோது அரண்மனை 5 எடுக்க போகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு எதுவும் கிடைக்கவில்லை என்றால் அரண்மனை 6, 7, 8,9,10 வரை கைவசம் வைத்திருக்கிறேன். என் கையில் அது ஒரு ஆயுதமாக இருக்கிறது. அதை வைத்து ஓட்டி விடுவேன்” என்று சுந்தர். சி தன்னிடம் சொன்னதாக வடிவேலு கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதற்கு ஒரு எண்டே இல்லையா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ