Homeசெய்திகள்க்ரைம்என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் - போலீஸ் மனு

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் – போலீஸ் மனு

-

- Advertisement -

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து 2 கோடிக்கு மேல் கொள்ளையடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் கேட்டு போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை முத்தையால் பேட்டையில் ஜமால் என்ற தொழிலதிபரின் வீட்டிற்கு வந்த 7 பேர் தாங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனவும், கோவை குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என வீட்டை சோதனை செய்து 2 கோடிக்கு மேல் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

வேங்கை அமரன் உட்பட ஆறு பேர் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்கவும், பின்னணியில் உள்ள நபர்களை பிடிக்கவும் ஆறு பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி 10 நாட்கள் காவல் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

MUST READ