spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தாம்பரத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை - போலீசார் விசாரணை

தாம்பரத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை – போலீசார் விசாரணை

-

- Advertisement -

தாம்பரம் அருகே வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டதால் முன் விரோதம் காரணமா? என்று போலீசார் விசாரணை

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர்  பிரபல ரவுடி மோகன் ராஜ் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மோகன்ராஜ் மணிமங்கலம் அடுத்த ஆதனூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளார்.

பிரபல ரவுடி வெட்டி கொலை - போலீசார் விசாரணை

we-r-hiring

இன்று காலை மோகன்ராஜை சில மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டதாக அவரது தங்கையின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் கூறியதை அடுத்து பதறி போனவர் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்தத போது தலை முற்றிலும் சிதைக்கபட்ட நிலையில் மோகன்ராஜ் கொலை செய்யபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்,

தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் உடலை கைபப்ற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முன் விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ