Homeசெய்திகள்க்ரைம்வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி  சென்ற சம்பவம்

வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி  சென்ற சம்பவம்

-

- Advertisement -

வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி  சென்ற சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓசூர் அருகே ஓசபுரம் தைலம் தோப்பில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. இறந்தவர் பெங்களூருவை சேர்ந்த ரவுடி என்பதும் அவரை மர்ம நபர்கள் கடத்திக் கொலை செய்து தமிழகப் பகுதியில் வீசி சென்றுள்ளது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி  சென்ற சம்பவம்
வெளி மாநிலம்

தளி அருகே ஓசபுரம் கிராமத்தில் தைலந் தோப்பு ஒன்றில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக குறித்து தளி கிராம நிர்வாக அலுவலர் மாயகண்ணன் தளி போலீசில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சடலம் மீட்கப்பட்ட இடம் தமிழக கர்நாடக எல்லை பகுதி என்பதால், ஆனேக்கல், எப்பகோடி, எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய கர்நாடக மாநில காவல் நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதில் ஒருவரை சில மர்ம நபர்கள் காரில் கடத்திச் செல்வது பதிவாகியிருந்த நிலையில் விசாரணையை தீவிர படுத்திய போலீசார், கர்நாடக மாநில போலீசாருடன் இறந்த நபர் குறித்து அடையாளம் காணப்பட்டது.

அப்போது,  இறந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி பகுதியில் காணாமல் போன ஜெயநகரை சேர்ந்த ரவுடி சுரேஷ் பாபு என்பதும், அவர் காணாமல் போனவர்கள் புகார் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து இரு மாநில போலீசாரம் நடத்திய விசாரணையில், இவர் ஜெயநகர் பகுதியில் பிரபல ரவுடி என்பதும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக மர்ம நபர்கள் இவரை கடந்த பதினாறாம் தேதி பெங்களூர் பகுதியில் இருந்து கடத்திக் கொண்டு வந்து கொலை செய்துவிட்டு, தமிழக பகுதியான ஓசபுரம் தைலத்தோப்பு பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து வீசி விட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கொலைக்கு காரணமான மர்ம நபர்களை இரு மாநில போலீசார் தேடி வருகின்றனர். அண்டை மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ