spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

கேரளாவில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

-

- Advertisement -

கேரளாவில் அண்மையில் உயிரிழந்த 23 வயது மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது மாணவர் பெங்களுருவில் படித்து வந்துள்ளார். அண்மையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. அதில் மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

Dead

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 16 குழுக்கள் அமைக்கபபட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவருடன் தொடர்பில் இருந்த 151 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவரகளில் 5 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அவர்களது மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

MUST READ