பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானது!
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
பீகாரில் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பணிகளும், மே மாதம் இரண்டாம் கட்ட பணிகளும் முடிந்தன. மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்தது. அதன்படி, அரசு அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிப்பட்ட நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பீகார் மாநில அரசு வெளியிட்டது. அதன்படி, பீகாரில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14, 13 கோடி மக்கள் தொகையில் பொதுப் பிரிவினர் 15.52%, தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%; பழங்குடி இன மக்கள் 1.69% என்பது தெரியவந்துள்ளது. இது 90 ஆண்டுளில் நடத்தப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது குறிப்பிடதக்கது.