Homeசெய்திகள்இந்தியாசமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் புதிய விதிமுறை: அவதூறு பதிவுகளை நீக்க 2 மணி நேரம்...

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் புதிய விதிமுறை: அவதூறு பதிவுகளை நீக்க 2 மணி நேரம் மட்டுமே கெடு!

-

- Advertisement -
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) போலிப் பதிவுகளைத் தடுக்க, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, பாலியல் மற்றும் ஆபாசப் பதிவுகளை அகற்றுவதற்குச் சமூக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு 24 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2 மணி
கெடு நேரங்கள் அதிரடிக் குறைப்பு:
  • சட்டவிரோதப் பதிவுகள்: அரசு அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோத மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்ற இருந்த காலக்கெடு 36 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • பயனர்களின் புகார்கள்: பயனர்களின் புகார்களைத் தீர்ப்பதற்கான அவகாசம் 72 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உணர்வுபூர்வமான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை:
குறிப்பாக, ஆபாசம் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற உணர்வுபூர்வமான விவகாரங்கள் தொடர்பான புகார்கள் மீது 2 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விதியை மீறினால் சட்டப் பாதுகாப்பு ரத்து:
இந்த புதிய விதிகளைப் பின்பற்றத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் மூன்றாம் தரப்புப் பதிவுகளுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு விலக்கை (Safe Harbour Rule) குறிப்பிட்ட சமூக ஊடகத் தளங்கள் இழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

MUST READ