Homeசெய்திகள்இந்தியாஒரே மாதத்தில் 5 முறை ரயிலை கவிழ்க்க சதி… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்….!

ஒரே மாதத்தில் 5 முறை ரயிலை கவிழ்க்க சதி… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்….!

-

- Advertisement -

பஞ்சாப்பில் ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழக்க நடந்த சதி திட்டம், லோகோ பைலட்டின் சாதுர்யத்தால் முறியடிக்கப்பட்டது.

ஒரே மாதத்தில் 5 முறை ரயிலை கவிழ்க்க சதி… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்….!பஞ்சாப் மாநிலம், பதின்டா மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர், ரயிலை கவிழ்க்க சதி திட்டம் போட்டுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் பதின்டா – டில்லி ரயிலேவே தண்டவாளத்தில் 9 நீண்ட கம்பிகளைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அந்த சமயம் அந்த வழியாக ரயில் வந்த போது, அதனை இயக்கி வந்த லோகோ பைலட், தண்டவாளத்தில் கம்பிகளை இருப்பதை கண்டு சுதாரித்து, ரயிலை நிறுத்தியுள்ளார்.

பின்னர், தண்டவாளத்தில் கம்பிகளை போட்டது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தண்டவாளங்களில் சிலிண்டர், டெட்டனேட்டர்களை வைத்து ரயில்களை கவிழ்க்க மர்ம நபர்கள் தீட்டிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5 முறை ரயில்களை கவிழ்க்க சதி நடந்திருப்பது ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ