கால்நடை கணக்கெடுப்பை 2024ம் ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் உறுப்பினர் ஒருவர் விலங்குகள் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பரிசோத்தம் ரூபாலா,
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் உதவியுடன் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மத்திய அரசு கால்நடை கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது.
குறிப்பாக ஆடு, மாடு, எருமை, செம்மறி ஆடு, பன்றி, குதிரை, கழுதை ஒட்டகம், நாய், முயல் மற்றும் யானை. மேலும் பறவை இனங்ககளான கோழி, வாத்து, வான்கோழிகள் என மொத்தம் 16 விலங்கு இனங்களின் 184 இனங்கள் தொடர்பாக கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இறுதியாக 2018-19 ம் ஆண்டில் கால்நடை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மொத்தம் 535.78 மில்லியன் கால்நடைகள் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதில் பசு மாடுகளின் எண்ணிக்கை மட்டும் 145.12 மில்லியன் என்றும் களைமாடுகளின் எண்ணிக்கை 122.98 மில்லியன் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கணக்கெடுப்பு 2024ம் ஆண்டு தொடங்க உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்துள்ளது.