Homeசெய்திகள்இந்தியாவருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!

-

- Advertisement -

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!EPF எனப்படும் ஊழியரின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரி

வருங்கால வைப்பு நிதியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டது. அதில், 2023- 2024 ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8.25% ஆக உயர்த்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020- 2021 ஆம் நிதியாண்டில் 8.5% ஆக இருந்த இந்த வட்டி விகிதம் 2021- 2022 நிதியாண்டில் 8.10% குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2022- 2023 ஆம் நிதியாண்டில் 8.15% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டிற்கு மேலும் அந்த வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை

அது தொடர்பான கோப்புகள் மத்திய நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு வருங்கால வைப்பு நிதியத்தின் பயனாளர்களின் கணக்குகளில் வட்டித் தொகை செலுத்தப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ