நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின. இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
பெண்களை நினைத்து அச்சம் கொள்கிறேன் – ராஷ்மிகா பகிர்வு
வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை; இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. ரூபாய் 25,000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் கைவிடப்படும்; பழைய வழக்குகள் கைவிடப்படுவதால் வருமான வரிச் செலுத்தும் ஒரு கோடி பேர் பயனடைவர். வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
ரஜினி சிறுதையின் அடிப்படையில் உருவானது டெஃப் ஃப்ராக்ஸ் – ஜீவா
அரசின் நேரடி வரி வசூல் 3 மடங்கு அதிகரித்துள்ளது; கூடுதலாக செலுத்திய வருமான வரியை திரும்பத் தரும் காலம் 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி 22% ஆக குறைக்கப்பட்டுள்ளது. நேரடி, மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும். சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலாவிற்கான பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.