Homeசெய்திகள்இந்தியாஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

-

 

ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

சுமார் ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகையை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் சிரோகி அமர்வில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 20- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விமரிசையாக நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

வரும் ஏப்ரல் 20- ஆம் தேதி அன்று இவ்வழக்கின் அடுத்தக்கட்ட நேரடி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

MUST READ