spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகட்சியை உடைத்து மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரானார் அஜித்பவார்!

கட்சியை உடைத்து மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரானார் அஜித்பவார்!

-

- Advertisement -

 

கட்சியை உடைத்து மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரானார் அஜித்பவார்!
File Photo

மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் இணைந்திருக்கிறார். அவர் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 02) பதவியேற்றுக் கொண்டார்.

we-r-hiring

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்கனவே, பா.ஜ.க.விற்கு எதிரான எதிர்க்கட்சிக் கூட்டணியான மகா விகாஸ் அகாடியின் அங்கமான சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஏக்நாத் ஷிண்டே புதிய அணியை உருவாக்கி முதலமைச்சராகிவிட்டார். துணை முதலமைச்சராக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், மகா விகாஸ் அகாடியின் மற்றொரு முக்கிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அதன் மூத்த தலைவர் அஜித்பவார் உடைத்துள்ளார். கட்சித் தலைவர் சரத்பவாரின் உறவினரான அஜித்பவார், 30- க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனி அணியாகப் பிரிந்து சிவசேனா- பா.ஜ.க. கூட்டணி அரசில் சேர முடிவு செய்தார்.

இதையடுத்து, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எட்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அஜித்பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் பொறுப்பையும், தேவேந்திர பட்நாவிஸுடன் பகிர்ந்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு படேல் ஆகியோர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அஜித்பவார், தனக்கு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக நீட்டிக்க விருப்பமில்லை எனவும், கட்சிப் பதவியே வேண்டும் என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

இது தொடர்பாக, ஜூலை 6- ஆம் தேதி கட்சியின் செயற்குழுக் கூடி முடிவெடுக்கப்படும் என்று சரத்பவார் கூறியிருந்த நிலையில், திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பா.ஜ.க. கூட்டணியுடன் கைக்கோர்த்துள்ளார் அஜித்பவார்.

முன்னதாக, மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அஜித்பவார் திடீரென்று கூட்டிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று புனேவில் இருந்து சரத்பவார் தெரிவித்திருந்தார்.

MUST READ