
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை இன்று (டிச.30) திறக்கப்படுகிறது.
“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!
கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப முகூர்த்தத்தில் திருவிதாங்கூர் மகாராஜா, சித்திரை திருநாள் பாலராமவர்மா மகாராஜா வழங்கிய 451 சவரன் தங்க அங்கியில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
அத்துடன், 41 நாட்கள் நீண்ட மண்டல காலம், மஹோச்சவம் நிறைவடைந்தது. இதையடுத்து, அன்றிரவு நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜைக் காலத்தில் 41 நாட்களில் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக இன்று (டிச.30) சபரிமலை நடைத் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!
மாலை 05.00 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி முரளி நம்பூதரி, கோயில் நடைத் திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். நாளை (டிச.31) முதல் அதிகாலை 03.00 மணி முதல் பகல் 01.00 மணி வரையிலும், மீண்டும் மாலை 03.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 15- ஆம் தேதி சபரிமலையில் மகரசங்கரன பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது. ஜனவரி 20- ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படவுள்ளது.