ம.பி.யில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் முன்னிலை
- Advertisement -

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதே சமயம், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது.

மத்தியப் பிரசேத மாநிலத்தில் உள்ள விதிஷா மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌகான் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் இவர் முன்னிலையில் உள்ளார். விதிஷா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான பிரதாப் பானு சர்மாவை விட சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சௌகான் முன்னிலை வகிக்கிறார்.