Homeசெய்திகள்இந்தியாமருந்துக் கடைகளில் இனி சிசிடிவி கட்டாயமா? மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனையை கண்காணிக்க மத்திய...

மருந்துக் கடைகளில் இனி சிசிடிவி கட்டாயமா? மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனையை கண்காணிக்க மத்திய அரசு புதிய திட்டம்!

-

- Advertisement -

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் குறிப்பிட்ட வகை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நடவடிக்கை தற்போது வரைவு பரிந்துரை நிலையிலேயே உள்ளது.

we-r-hiring

எந்த மருந்துகளுக்கு கண்காணிப்பு?

மருத்துவரின் பரிந்துரை அவசியமான Schedule H, Schedule H1 மற்றும் Schedule X மருந்துகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை கண்காணிக்க இந்த சிசிடிவி நடைமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Schedule H மருந்துகள் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரின் செல்லுபடியாகும் மருந்துச்சீட்டு மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். Schedule H1 என்பது அதன் துணைப் பிரிவாகும். Schedule X-ல் குறிப்பிட்ட பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மனோவியல் மற்றும் போதைப்பொருள் வகை மருந்துகள் அடங்கும்.

மருத்துவர் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

சில மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே தூக்க மாத்திரைகள், வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பை வலுப்படுத்த இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.

சிசிடிவி பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும்

வரைவு விதிமுறை அமல்படுத்தப்பட்டால், மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளை கண்காணிக்கும் வகையில் உரிமம் பெற்ற மருந்துக் கடைகளில் சிசிடிவி அமைப்பு பராமரிக்கப்பட வேண்டும். சிசிடிவி பதிவுகளை 3 மாதங்கள் வரை பாதுகாக்க வேண்டும் என வரைவு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த விற்பனை நிலையங்களுக்கு இந்த குறிப்பிட்ட CCTV நிபந்தனை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் கோரியுள்ளது. செப்டம்பர் 8, 2026 அன்று இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது குறித்து Drugs Consultative Committee பரிசீலித்து, மருந்துக் கடைகளில் சிசிடிவி அமைப்பை கட்டாயமாக்குவதற்கு விதிகளில் திருத்தம் செய்யலாம் என பரிந்துரைத்துள்ளது.

மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவா?

இதனிடையே, மருந்து விற்பனையாளர்கள் தரப்பில் இந்த திட்டம் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. கேமராக்கள், பதிவு சாதனங்கள், சேமிப்பு வசதி, வயரிங் மற்றும் இணைய இணைப்பு உள்ளிட்ட செலவுகள் ஏற்படும் என All India Organisation of Chemists & Druggists தெரிவித்துள்ளது.

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு!

MUST READ