பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் அவரது மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.


5.7 அடி உயரத்தில் மெழுகுச் சிலை
மோடியின் மெழுகுச் சிலையை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிற்பி சுஷாந்தா ராய் உருவாக்கியுள்ளார். மெழுகு மற்றும் இரும்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 5.7 அடி உயரம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலைக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்கும் வகையில் பெங்காலி வேட்டி மற்றும் குர்தா அணிவிக்கப்பட்டுள்ளது. சிலையை உருவாக்க சுமார் 2 மாதங்கள் எடுத்ததாக சிற்பி சுஷாந்தா ராய் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாள் கனவு
பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையை உருவாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று சிற்பி சுஷாந்தா ராய் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மெழுகுச் சிலையை உருவாக்கியதாக சிற்பி தெரிவித்துள்ளார்.
பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க பாஜக தலைமையகத்தில் இந்த மெழுகுச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
76-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் முதல் பிரதமர் வரையிலான அரசு பொறுப்புகளில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
