தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா இல்லத்தில் நடைபெறுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளை வலுப்படுத்தும் நோக்கிலும், பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து விவாதிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு பிறகு அம்பேத்கர் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கை வெளியாக கூடும் எனவும் கூறப்படுகிறது.