Homeசெய்திகள்இந்தியாநிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?

நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?

-

- Advertisement -

நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?

நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையை குறித்த புதிய விளக்கம்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை- 23 தாக்கல் செய்தார். அதில் ஆந்திரா, பீகார் மாநிலத்திற்கு மட்டும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிதிநிலை அறிக்கையில் மற்ற மாநிலங்களின் பெயரைக் கூட குறிப்பிட வில்லை. அதனால் இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர்.

இன்று நாடாளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே எழுந்து இந்த நிதிநிலை அறிக்கை நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளும் பாரபட்சமான நிதிநிலை அறிக்கை என்று விமர்சனம் செய்தார். அதனை தொடர்ந்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், எனது பதிலை கேட்காமல் எதிர் கட்சியினர் வெளிநடப்பு செய்கின்றனர். “ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும்
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட முடியாது. மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதற்காக அதனை புறக்கணிப்பு என்று எடுத்துக் கொள்ள கூடாது என்றார்.

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடுவோம் – பிரியங்கா காந்தி

இடைக்கால வரவுசெலவுத் திட்டம், பொது வரவுசெலவுத் திட்டம் ஆகியவற்றில் மகாராஷ்டிராவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாமல் திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் எதிர் கட்சிகள் வேண்டும் என்றே மத்திய அரசை குறை சொல்வதாக அவர் பேசினார்.

MUST READ